சிகாகோ

சிகாகோவில் காணால் போன ஒரு கர்ப்பிணிப் பெண் கொல்லப்பட்டு வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளது.

மார்லென் ஒசாவோ என்னும் சிகாகோவை சேர்ந்த பெண் 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.   அவருடைய முகநூல் நண்பரான மற்றொரு பெண் தன்னிடம் இருந்த குழந்தைகளின் உடைகள் மற்றும் தள்ளுவண்டி ஆகியவைகளை அவருக்கு தருவதாக கூறி உள்ளார்.   அதை ஒட்டி அந்த தோழியின் வீட்டுக்கு சென்று அதை வாங்கிக் கொண்டு திரும்பும் வழியில் மார்லென் காணாமல் போய் உள்ளார்.

அவரை அவர் குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.    இந்நிலையில் அந்தப் பெண் சடலமாக கிடந்துள்ளார்.   அவருடைய வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளது.   காவல்துறையினரின் கருத்துப்படி மார்லென் கொடூரமாக தாக்கப்பட்டு அதன் பிறகு அவருடைய வயிற்றில் இருந்து குழந்தை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதை ஒட்டி அந்த குழந்தையை தேடும் பணி தொடர்ந்தது.  இந்நிலையில் ஒரு குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.   அந்தக் குழந்தையின் மரபணு மற்றும் மார்லென் டூத் பிரஷ் மூலம் கிடைத்த அவர் மரபணு இரண்டும் சோதித்ததில் இந்த குழந்தை மார்லென் உடையது இல்லை என தெரிய வந்துள்ள்ளது.   குழந்தையை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.