ராமேஸ்வரம்:
வுகணை நாயகன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கில் பிரித்வி ஏவுகணை வைக்கப்பட்டு உள்ளது.
aprithivi
பேய்க்கரும்பில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாடு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கில், மாதிரி பிரித்வி ஏவுகணைகள், ராக்கெட்டுகள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
கலாம் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள், எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ், ஆகாஷ், பிரித்வி, தனுஷ் ஏவுகணை மாதிரிகள், மிராஜ், மிக் 2, தேஜஸ் ஆகிய போர் விமானங்களின் மாதிரிகள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.
கண்காட்சியை, இன்று முதல் ஆக.1 வரை, பொதுமக்கள் பார்வையிடலாம்’ என  அதிகாரி தெரிவித்து உள்ளார்.