வேலூர்,

லப்பு காதல் திருமணம் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நீதிபதியின் மகளே, காவல் கண்காணிப்பாளரிடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வேலூர் மாவட்டத்தில் சார்பு நீதிபதியாக இருப்பவர் அசிம்.  இவரது மகள் தமீம். இவர்  பெல்காந்தி என்ற மாற்று மாத இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு அசிம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இவர்கள் கடந்த வாரம் கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த நீதிபதி அசிம், மகளை கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார். இதன் காரணமாக, தனது தந்தை யினால் தனக்கும் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட் காவல்  கண்கானிப்பளாருக்கு சார்பு நீதிபதி அசிமின் மகள் புகார் மனு கொடுத்துள்ளார்.

புகார் மனு குறித்து நீதிபதி அசிம் விசாரணை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. மகளே தந்தைமீது புகார் கொடுத்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.