தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவருமான மு.க. அழகிரி, இன்று   மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது கேட்கப்ட்ட கேள்விகளும், அவர் அளித்த பதிலும் (ஒருமைதான்!)
கே: மீண்டும் உங்களுக்கு தி.மு.க. தென் மண்டல அமைப்பாளர் பதவி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?
ப: வதந்தி
கே: கலைஞர் உடல் நிலை குறித்த அதிர்ச்சிகரமான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவுகிறதே..?
ப:வதந்தி. அப்படி யிருந்தால் மதுரை வந்திருப்பேனா?
கே: துரை தயாநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்படுமா?
ப: வதந்தி
இவ்வாறு  மூன்று கேள்விகளுக்கு “வதந்தி” என பதில் சொல்லி கிளம்பிச் சென்றார் மு.க. அழகிரி.