திருவாரூர்: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் செய்து வரம் ஸ்டாலின், நேற்று மாலை மறைந்த கருணாநிதி பிறந்ந ஊரான திருக்குவளையிலுள்ள  அவரது நினைவு இல்லத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின் நேற்று பிற்பகல் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரதாபராமபுரத்தில்  பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று அவர்களுக்கு பதில் அளித்துடன், சிறப்புரை ஆற்றினார்.

 

அதனைத் தொடர்ந்து மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த இல்லமும் தற்பொழுது அஞ்சுகம் முத்துவேலர் படிப்பகமாக செயல்பட்டு வரும் இல்லத்திற்குச் சென்று தனது தாத்தா, பாட்டி, அப்பா, மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் தலைவர் கலைஞர் பிறந்த ஊரில், பிறந்த வீட்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழகத்தை காப்போம் என்று எழுதி கையொப்பமிட்டார்.