கொரோனா நோயாளிகளை   ஊசி போட்டுக் கொல்வதாகச்  செய்தி பரப்பிய எம்.எல்.ஏ. கைது.

அசாமில் திங் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஹாஜி அமினுல் இஸ்லாம்..

அண்மையில் அவர் கொரோனா குறித்து ஒரு கருத்து தெரிவித்து, அதனைச் சமுக வலைத் தளங்களில் பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் என்ன பேசி இருந்தார் தெரியுமா?

‘’கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களைக் கூட இங்குள்ள மையங்களில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு உணவு கொடுப்பதில்லை. குடியுரிமை இல்லாத வெளிநாட்டுக்காரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை விட, இந்த மையங்கள் ஆபத்து நிறைந்ததாக உள்ளது’’ என்று அடுக்கடுக்காக புகார் பட்டியல் வாசித்து இருந்தார்.

‘ ஊசி போட்டுக் கொல்வதற்காகவே அவர்களை இங்கே அடைத்து வைத்துள்ளனர்’’ என்று  அந்த ஆடியோவில் அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் அந்த எம்.எல்.ஏ.வை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் தள்ளி விட்டனர்.

அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்