சென்னை: முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நாளை நம் தேசிய வாக்காளர் தினம். நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமையை உணர வேண்டிய தருணமிது.

தமிழகத்தைச் சீரமைத்து, நம் சந்ததிகளிடம் பொலிவு கெடாமல் ஒப்படைக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம். நாளைநமதே என்று அவர் பதிவிட்டுள்ளார்.