சென்னை:

ன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 6–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.

அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்,  தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாக கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும் என பள்ளிக்ல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,  இன்று பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்  தனது டுவிட்டர்  பக்கத்தில்  நேற்று இரவு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.