புதுவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு உழவர்கரை எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொறுப்பு காலியாக உள்ளது. இப்பொறுப்புக்கு போட்டியிட விரும்புவோர், வேட்புமனுவை தாக்கல் செய்ய சட்டப்பேரவை செயலர் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்நிலையில், உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவான எம்.என்.ஆர் பாலன், துணை சபாநாயகர் பொறுப்புக்கான வேட்புமனுவை இன்று காலை, சட்டப்பேரவை செயலர் வின்சென் ராயரிடம் அளித்தார்.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு திமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால், துணை சபாநாயகராக பெரும்பான்மை ஆதரவுடன் பாலன் தேர்வாகலாம் என்று தெரிகிறது. அதேநேரம், எதிர்கட்சிகள் தரப்பில் என்.ஆர் காங்கிரஸ் சார்பிலான வேட்பாளர் நிறுத்தப்படவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.