டாக்கா:

வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் வசிக்கும் கிராமம் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்டது. இதில் 30 வீடுகள் சேதமடைந்தன. நாற்பதுக்கும் மேற்பட்டோர் காயமடந்தனர். ஒருவர் பலியானார்.

வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள். அங்கு இந்துக்கள் வசிக்கும் சில கிராமங்களில் தாக்குர்பரா என்பதும் ஒன்று. இந்த கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மதங்களுக்குள் இருக்கும் வேறுபாடு குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியதாக ஒரு வதந்தி பரவியது.

இந்த நிலையில் அந்த கிராமத்தினர் மீது அக்கம்பக்கத்தில் பெரும்பான்மையினரான இஸ்லாமியர்கள் வசிக்கும் கிராமத்திலிருந்து பலர் வந்து தாக்குதல் நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அந்த கிராமத்தை சுற்றி வளைத்து கிராமத்துக்கே தீ வைத்தனர்.

இதில் முப்பது வீடுகள் தீக்கிரையாகின. நாற்பதுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் ஒருவர் இன்று காலை மரணம் அடைந்தார்.