சென்னை:
சென்னையில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ள நிலையில் 15 மண்டலங்களிலும் நடமாடும் ஆம்புலன்ஸ் மருத்துவமனைகள்  மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை  சமாளிக்க நடமாடும்  ஆம்புலன்ஸ் மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், நாளை முதல் சென்னையின் 15 மண்டலங்களிலும் நடமாடும் மருத்துவமனைகள் செயல்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
மேலும் இதற்காக  173 ஆம்புலன்ஸ்கள் நடமாடும் மருத்துவமனைகளாக  செயல்பட இருப்பதாக கூறியவர், .  கொரோனா தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களுக்கு, நடமாடும் மருத்துவமனை களிலேயே சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளளது.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.