லக்னோ:

உ.பி. சட்டமன்ற தேர்தலில் 3 கட்ட வாக்குபதிகள் முடிவுற்ற நிலையில் 4வது கட்ட வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து தேர்தல் நடைபெற இருக்கும் தொகுதிகளில் உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் 3 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் 4-வது கட்ட தேர்தல் வரும் வியாழக்கிழமை (23ந்தேதி) நடைபெறவுள்ளது.

நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவுற இருக்கிற நிலையில் உச்சகட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. உ.ப.யில் உள்ள ஓராய் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி,  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியை கடுமையாகத் தாக்கி பேசினார்.

இதற்கு பதிலடியாக சுல்தான்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் மாயாவதி தேர்தல் பரபப்புரை ஆற்றினார். அப்போது,

பகுஜன் சமாஜ் கட்சி முதலில் ஒரு இயக்கம், பின்னர் தான் அது கட்சி. திருமணமே செய்து கொள்ளாமல் சிறுபான்மையினர் நலனுக்காக குறிப்பாக முஸ்லீம்கள் நலனுக்காக நான் உழைத்து வருகிறேன். சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்கள் தங்களது மிகப்பெரிய சொத்தாக என்னைக் கருதுகின்றனர்.  பிரதமர் மோடி தலித்துகளுக்கு எதிரான மனிதர்.   பகுஜன் சமாஜ் கட்சியை பேகன்ஜி சமாஜ் கட்சி என்று கூறிய பிரதமர் மோடியை உத்தர பிரதேச மக்கள் இந்தத் தேர்தலில் பழிக்குப்பழி வாங்குவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.