டில்லி

நாட்டின் இளைஞர்களையும் விவசாயிகளையும் பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.

இன்று காங்கிரஸ் கட்சியின் சர்பில் ஜன் ஆக்ரோஷ் என்னும் மக்கள் ஆவேச பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பல காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு பேசிய சோனியா காந்தி, “பாஜக நாடு முழுவதும் வெறுப்பை விதைத்துள்ளது.   நாட்டில் வன்முறை கட்டவிழுத்து விடப்பட்டுள்ளது.   மோடி அரசில் ஊழல் ஆணிவேர் வரை பெருகிவீட்டது.  குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை இந்த பாஜக அரசு கப்பாற்றி வருகிறது.

இந்தியப் பிரதமர் மோடி இளைஞர்களையும் விவசாயிகளையும் தனது பொய்யான வாக்குறுதிகளால் பெரிதும் ஏமாற்றி விட்டார்.    சுதந்திரமான அமைப்புக்களை பாஜக அரசு சிதைத்து வருகிறது.   பொருளாதாரத்தை மிகவும் நாசம் செய்து விட்டது” எனக் கூறினார்.