டில்லி:

‘‘தமிழக புயல் பாதிப்புக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வரிடம் மோடி உறுதியளித்துள்ளார். புயல் பாதிப்புகள் குறித்த அறிக்கைகளை விரைவாக அனுப்புவதாக மோடியிடம் முதல்வர் தெரிவித்துள்ளார்.