டில்லி

ந்திரா படகு விபத்தில் இறந்தோருக்கும் ஈரான் நிலநடுக்கத்தில் இறந்தோருக்கும் மோடி இரங்கள் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் விஜயவாடா அருகில் கிருஷனா நதியில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில் படகு மூழ்கி பலர் மரணம் அடைந்தனர்.    நேற்று இரவு ஈரான் மற்றும் ஈராக் பகுதிகளில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “கிருஷ்ணா நதியில் நிகழ்ந்த படகு விபத்தில் மரணமடைந்தோர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிந்துள்ளார்.

மற்றொரு டிவிட்டர் பதிவில், “ஈரான் மற்றும் ஈராக்கில் நிலநடுக்க செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.  இறந்தோருக்கு இரங்கல்கள்.  காயமடைந்தோர் விரைவில் குணமைடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.