டில்லி:

ர்ச்சையில் இல்லாத நிலத்தை ராமஜென்மபூமி அமைப்பிடம் ஒப்படைக்க அனுமதி வழங்க கோரி உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இது ராமஜென்ம பூமி விவகாரத்தில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி இடம் சம்பந்தமான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்திற்கு,  ராமஜென்ம பூமி இயக்கத்தினரும், சன்னி வஃபு வாரியமும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது. இன்று விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விசாரணையில் பங்கேற்க இயலாத சூழலால், விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில்,  புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மனுவில்,  “அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றி கையகப்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குள்ளாகாத நிலத்தை ராமஜென்ம பூமி  நிவாஸ் அமைப் பிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மொத்தம் கையகப்படுத்தப் பட்டுள்ள 67 ஏக்கர் நிலத்தில் 0.313 ஏக்கர் நிலம் மட்டுமே சர்ச்சைக்குரியது” மீதமுள்ள இடத்தை ராமஜென்மபூமி நிவாஸ் அமைப்பிடம் ஒப்படைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, ராமர் கோயில் வழக்கு 70 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில்,விரைவில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், மத்தியஅரசு தற்போது புதிய மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறிய இந்துத்வா அமைப்புகள்,  கடந்த 1992 ம் ஆண்டு கரசேவகர்களால்  பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த   67 ஏக்கர் நிம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. ஆனால், இந்த மொத்த இடத்தில்,  2.7 ஏக்கர் நிலம் மட்டும்தான் சர்ச்சைக்குரியதாக கூறப்படுகிறது.

இந்த 2.7 ஏக்கர் நிலத்தை தவிர்த்து மற்ற இடத்தை தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ், சிவசேனா உள்பட இந்துத்வா அமைப்புகள் ராமர்கோவில் கட்டுவதை உறுதிப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில், இந்து அமைப்புகளின் ஆதரவை பெறும் நோக்கில் மத்திய அரசு இந்த புதிய மனுவை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.