டில்லி:

ன்று இரவு 7 மணிக்கு 2வது முறையாக மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ள நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு தேநீர் விருந்துக்கு பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்துகொள்ள ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேநீர் விருந்துக்கான அழைப்பை தொடர்ந்து ஓபிஎஸ் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

மத்திய புதிய அமைச்சரவை பதவியேற்புக்கு முன்னர் பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும்படி ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த முறை அமைக்கப்பட உள்ள அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிவசேனா, ஐக்கியஜனதாதளம்,  லோக் ஜன சக்தி, சிரோன்மணி அகாலி தளம் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ள நிலையில், அதிமுகவுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.