“பிரதமர் மோடியின் நடவடிக்கையால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி, போட்டிகள் நடக்கின்றன. மாணர்கள் போராட்டம் என்பது கூடுதல் பலம் அளித்தது” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“மோடி இல்லை எனில் ஜல்லிக்கட்டு நடநந்திருக்காது. அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு இல்லை. ஜல்லிக்கட்டுக்காக நான் செய்த முயற்சிகள் தான் பலன் அளித்துள்ளது.  மாணவர்கள் போராட்டம்தான் இதற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது.

விரும்பத்தகாத சக்திகள் மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்திக்கொண்டன.

பீட்டாவையும், விலங்குகள் நலவாரியத்தையும் நெறிப்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது” என்று முதல்வர் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.