மாஸ்கோ:

பிரதமர் மோடி இன்று ரஷ்யா சென்றார். அங்கு சோச்சி மாகாணத்தில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது இருவரும் இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இணைய ரஷ்யா ஆதரவு தெரிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக மோடியை ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பங்கஜ் சரண், சோச்சி மேயர் ஆனேடோலி பொகார்மேவ் ஆகியோர் வரவேற்றனர்.