டில்லி:

‘‘குஜராத் தேர்தல் தோல்வி பயம் காரணமாக பாகிஸ்தான் குறித்து மோடி பேசுகிறார்’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசுகையில், ‘‘ குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது. இதில் காங்கிரசாரும் பங்கு கொண்டுள்ளனர். சமீபத்தில் பாகிஸ்தான் நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியினர் சந்தித்த போது இது குறித்து விவாதிக்கப்பட்டது’’ என்றார்.

மோடியின் இந்த பேச்சுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ பிரதமர் மோடி தான் அழைப்பு இல்லாமல் பாகிஸ்தான் சென்றார். காங்கிரஸ் நிர்வாகிகள் குறித்து தவறான தகவலை கொடுத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்.

பாகிஸ்தான் பிரதிநிதிகளிடம் நாங்கள் குஜராத் தேர்தல் குறித்து பேசவில்லை. குஜராத் தேர்தல் தோல்வி பயத்தால் மோடி பாகிஸ்தானை கையில் எடுத்துள்ளார். தேச பக்தி விஷயத்தில் காங்கிரஸூக்கு போதனை அளிக்க தேவையில்லை. பிரதமர் அலுவலக மதிப்பை மோடி குறைக்கிறார். தவறான தகவல் அளிக்கும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.