டில்லி

ரும் திங்கள்கிழமை அன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்படுகிறது.  தற்போது ஊரடங்கு விதிகளில் பல மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு சில இடங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  இந்நிலையில் வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது.  ஆயினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இது மக்களிடையே பீதியை உண்டாக்கி இருக்கிறது.

எனவே வரும் திங்கள் அன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.