வாஷிங்டன்,

மெரிக்க அதிபர் டிரம்புடன் இந்திய பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அமெரிக்காவின்  விசா கெடுபிடி குறித்து பேசுவாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

3 நாள் வெளிநாட்டு பயணமாக சென்ற பிரதமர் மோடி, போர்ச்சுக்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க வந்துள்ளார். அங்கு அமெரிக்க தொழிலதிபர்களை சந்தித்து, இந்தியாவுக்கு தொழில் தொடங்க அழைத்த மோடி இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசுகிறார்.

 

நேற்று அமெரிக்க நாட்டின் தலை நகர் வாஷிங்டன் சென்ற மோடிக்கு,  அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ மாளிகையான வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு செல்கிறார். அங்கு அவரை ஜனாதிபதி டிரம்ப் வரவேற்கிறார்.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு டிரம்ப் விருந்து அளித்து கவுரவிக்கிறார்.  அப்போது இந்தியா வருமாறு, ஜனாதிபதி டிரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும், அமெரிக்கா விசா கட்டுப்பாடு குறித்தும், அதில் இந்தியர்களுக்கு கெடுபிடி இல்லாமல் அனுமதி வழங்குவது குறித்தும் விவாதப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை குறித்து,  இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை மோடி நெதர்லாந்து நாட்டுக்கு புறப்படுகிறார்.