டில்லி

பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் ஒருவர் டிவிட்டரில் தன்னை பின்தொடருமாறு மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார்

சமூக வலை தளமான டிவிட்டரை அதிகம் பயன்படுத்தும் பிரபலங்களில் பிரதமர் மோடியும் ஒருவர் ஆவார்.    அவரை 5.23 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.   உலகில் உள்ள அரசியல் தலைவர்களில் அதிகம் பின்பற்றுவோரைக் கொண்டவர்களில் மோடியும் ஒருவராக உள்ளார்.   பிரதமர் 87 பேரை பின் தொடர்ந்து வருகிறார்.

இவர்களில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் உள்ளனர்.  அவர்களைத் தவிர விளையாட்டு பிரபலங்களான தீபா கர்மாகர், பபிதா போகத், சசி மாலிக், மற்றும்  திரையுலகப் பிரபலங்களான கரண் ஜோகர், ரண்வீர் சோரி, ஏக்தா கபூர் உள்ளிட்டவர்களும் அடங்குவார்கள்.

புத்தாண்டு அன்று மோடியின் தீவிர ரசிகரான அன்கிட் துபே, “மதிப்புக்குரிய பிரதமர் அவர்களே, நான் உங்களது தீவிர ரசிகர் ஆவேன்.  நான் தொடர்ந்து உங்களைப் பின்பற்றி வருகிறேன்.  2019 முடியும் இந்த தறுவாயில் எனக்கு ஒருபரிசு கிடைக்குமா?  நான் உங்களை பின் தொடர்வது போல் நீங்கள் தயவு செய்து என்னை பின் தொடர்வீர்களா?? என மோடிக்குக் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பிரதமர் மோடி, “இதோ செய்து விட்டேன்.  வரும் வருடம் உங்களுக்கு பிரம்மாண்டமாக அமையட்டும்” எனப் பதிந்து அவரை பின்பற்றத் தொடங்கி உள்ளார்.