கொல்கத்தா

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி அவர் இந்தியா தோற்க பணம் வாங்கியதாக கூறியதற்கு பதில் அளித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும் ஹசின் ஜகானுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.   அப்போதிலிருந்தே ஷமியும் அவர் வீட்டாரும் தன்னை கொடுமைப் படுத்துவதாக ஹசின் தெரிவித்தார்.   மேலும் ஷமிக்கும் பல பெண்களுக்கும் தகாத உறவு இருப்பதாகவும் இது பற்றி கேட்டதற்கு தன்னை அடித்து உதைத்ததாகவும் கூறி உள்ளார்.

அத்துடன், “ஷமி என்னை ஏமாற்றியது போல் இந்த நாட்டையும் ஏமாற்றி உள்ளார். அவர் போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என்பதற்காக அலிஸ்பா என்னும் பாகிஸ்தான் பெண்ணிடம் இருந்து துபாயில் பணம் வாங்கியது எனக்கு தெரியும்.   இட்ந்த நிகழ்வு இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாய் முன்னிலையில் நடந்தது.  என்னிடம் இதற்கு ஆதாரம் உள்ளது”  எனவும் கூறி இருந்தார்.

இது குறித்து முகமது ஷமி, “இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை.  நான் ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவன்.   அது போல நிச்சயம் நடந்துக் கொள்ள மாட்டேன்.   ஜகான் குடும்பத்தாருடன் எனது குடும்பத்தினர் கலந்து பேசி விரைவில் என் மீது சொல்லப்பட்டவை தவறென நிரூபிப்பார்கள்.

நான் எனது நாட்டுக்காக விளையாடி வருகிறேன்,   நான் எனது நாட்டை ஏமாற்றுபவன் இல்லை.  எனது 100% திறமையையும் எனது விளையாட்டில் வெளிப்படுத்தி உள்ளேன்.   நான் எனது நாட்டை ஏமாற்றுவதற்கு பதில் இறக்கவும் தயாராக உள்ளேன்”  என கூறி உள்ளார்.