அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு கழித்து வெளியாகும் மோகன்லால் திரைப்படம்..

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள மலையாளப்படமான ‘’ மரக்கார்: அரபிக்கடலிண்டே  சிம்ஹம்’’ என்ற திரைப்படம், எல்லா வேலைகளும் முடிந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளிவருவதாக இருந்தது.

கடைசி நேரத்தில் கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இந்த படம் முடங்கி போனது.

ரிலீஸ் அன்று ஒட்டுவதற்காக வைத்திருந்த போஸ்டர்கள் அத்தனையும் வீணானது.

கொரோனா ஓரளவு கட்டுக்குள் இருப்பதால் கேரள மாநிலத்தில் வரும் செவ்வாய்க்கிழமை தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து ’மரக்கார்’’ திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய சினிமா , இந்த ஆண்டு மார்ச்சில் வெளியாகிறது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் சைனீஸ் மொழிகளில் சுமார் 50  நாடுகளில் இந்தப்படம் ரிலீஸ் ஆகிறது.

நம்ம ஊர் ஆட்கள் பிரபு, சுஹாசினி, ஆகியோருடன் சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், கடற்படை தளபதியின் உண்மை கதையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி