ஜீத்து ஜோசப் இயக்கும் திரிஷ்யம் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ள மோகன்லால், சில தினங்களுக்கு முன்னர் துபாய் புறப்பட்டு சென்றார்.

அங்கு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார். கிரிக்கெட் போட்டியை அவர் பார்க்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியானது.

ஏதாவது ஒரு கிரிக்கெட் அணியை ஏலம் எடுக்கும் நோக்கத்தில் மோகன்லால் துபாய் சென்றுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்துடன், துபாயில் மோகன்லால் தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

துபாயில் சஞ்சய் தத்துடனும், அவர் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடனும் மோகன்லால் புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த போட்டோக்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சஞ்சய் தத்துக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டுள்ள நிலையில், அவர் துபாயில் வசிக்கும் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க கடந்த மாதம் துபாய் சென்று தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

– பா. பாரதி