மலையாள மெகா ஸ்டார் மோகன்லாலுக்கு ஆடம்பர வீடுகள், கார்கள் வாங்குவதில் அலாதி பிரியம் உண்டு. அவர் அண்மையில் துபாயில் உள்ள ‘DOWNTON’ பகுதியில் ‘R.P.HEIGHTS’ என்ற இடத்தில் ஆடம்பர பங்களாவை விலைக்கு வாங்கியுள்ளார்.

கடந்த வாரம் இதன் கிரகப்பிரவேசம் நடைபெற்றுள்ளது. இந்த வீட்டில் நுழைந்த முதல் விருந்தாளி யார் தெரியுமா?

இயக்குநர் அசோக்குமார்.

மோகன்லாலின் சிறு வயது தோழரான இவர் தான், ‘திரனோட்டம்’ என்ற படத்தில் மோகன்லாலை சினிமா நடிகராக அறிமுகம் செய்தவர் (ஆனால் ’மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ முதலில் வெளியானது)
அசோக்குமார், தனது மனைவி பீனாவுடன், மோகன்லால் வீட்டில் நிறைய புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அதனை பீனா, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட, அவை கேரளாவில் உள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீட்டு பால்கனியில் மோகன்லாலும், அசோக்குமாரும் நிற்க, பின்னணியில் உலகின் மிக உயரமான கட்டிடமான ‘BURJ KAALIFAA’ பிரமாண்டமாக காட்சி அளிக்கும் புகைப்படம், சொக்க வைக்கிறது.

– பா. பாரதி