ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’.

இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நாகர்கோவிலில் நவம்பர் 29 முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரிகின்றனர் .

இந்நிலையில் தற்போது இதன் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், “இந்த ஷெட்யூல் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

44 நாட்கள் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு நடத்தினோம். இதில் சுமார் 90% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கடவுளுக்கும், கன்னியாகுமரி மக்களுக்கும் நன்றி. எனது குழுவினர் மற்றும் நயன்தாராவின் ஒத்துழைப்புக்கு நன்றி. கோடைக்கு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.