டெல்லி:
வாசனை இழப்பு , சுவை இழப்பு, தசை வலி உள்பட மேலும் சில குறிப்புகள் கொரோனா அறிகுறிக்கானது என மத்தியசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியாக காய்ச்சல், சளி, தொண்டை வலி போன்ற என கூறப்பட்டது. தொண்டை புண், சளி, இருமல், அதிகப்படியான உடல் வெப்பநிலை கொண்டிருக்கும் காய்ச்சல் போன்றவை பிரதான அறிகுறிகளாக எச்சரிக்கப்பட்டது.
ஆனால், தற்போது கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், மேலும் பல அறிகுறி உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக மத்தியசுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
அதன்படி, தற்போது ஏற்கனவே உள்ள அறிகுறிகள் மட்டுமின்றி, கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு, வாசனை உணர்வும் சுவை உணர்வும் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த காது தொண்டை நோயின் அகாடமி தலைமை செயல் அதிகாரியான ஜேம்ஸ் டென்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் தாக்கிய அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு பொருள்களின் மணமும், சுவைத்தால் நாக்கில் சுவை தெரியாமலும் இருக்கும் அறிகுறியும் தென்படும் என்றும் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதை உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தியிருந்தது.
இதையடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனாவுக்கான அறிகுறிகள் பட்டியலில்,நுகர்வு, சுவைத் தன்மையை இழப்பதும் சேர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறி
- காய்ச்சல்
- இருமல்
- உடல் சோர்வு
- மூச்சுத் திணறல்
- தசை வலி (myalgia)
- மூக்கு அடைப்பு (Rhinorrhea)
- தொண்டை வலி( sore throat)
- வயிற்றுப்போக்கு( diarrhea)
- சளி (expectoration)
- வாசனை இழப்பு (anosmia)
- சுவை இழப்பு(ageusia)