மதுரை:

துரை மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,225ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு இன்று மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மதுரை மாவட்டத்தில் 1073 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 641 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும்,  423 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும்,9 பேர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை (25ந்தேதி)  கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில் மதுரை பரவை மார்க்கெட்டில் பரிசோதனை நடத்தியதில் 25 பேர் உள்பட மொத்த 125 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மார்க்கெட்டில் கடை வைத்திருந்த வர்கள், அங்கு பொருட்கள் வாங்கியவர்களை கண்காணிக்கும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.