சென்னை:

தினகரன் ஆதரவு எம்.பிக்கள் மேலும் 2 பேர் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.பிக்களான நவநீதகிருஷ்ணன், விஜிலாசத்யானந்த், புதுச்சேரி கோபால கிருஷ்ணன், ஆகியோர் நேற்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இவர்களை தொடர்ந்து இன்று (28ம் தேதி) வேலூர் எம்.பி. செங்குட்டுவன் மற்றும் திண்டுக்கல் உதயகுமார் ஆகியோர் முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து தினகரன் அணியில் இருந்து வெளியேறிய எம்.பிக்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.