சென்னை:  தமிழக மக்களின்  பசியைப் போக்க நடமாடும் அம்மா உணவகம் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அம்மா உணவகம் மக்களைத் தேடி வரும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் திட்டம் ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் விதமாக அமைந்தது. மக்கள் மத்தியில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, தற்போது நடமாடும் அம்மா உணவகத்தை எடப்பாடி தொடங்கி வைத்துள்ளார்.

இன்று தலைமைச் செயலகத்தில் இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.னெடுத்து வருகின்றன.  முதற்கட்டமாக இன்று மூன்று நடமாடும் அம்மா உணவக வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள அம்மா நடமாடும் உணவகங்கள் வடசென்னை, தென்சென்னை மத்திய சென்னை ஆகிய பகுதிகளில் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் பணியாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்க நடமாடும் அம்மா உணவகத்தைத் தொடங்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும்,  நாளடைவில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும், நடமாடும் அம்மா உணவகங்களைச் செயல்படுத்தச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

அதுபோன்ற தொழில் நிறுவனங்கள், கட்டுமான பணியிடங்கள், பேருந்து நிலையம் என பொதுமக்கள் அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் இந்த நடமாடும் உணவக வாகனங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.