நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழில் அதிபருமான வசந்த குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டி ருந்தார். அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்ட்சி தலைவர்கள். திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பட இயக்குனர் மற்றும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்ப தாவது:

 


கல்வி தந்த கர்மவீரர் காமராஜரின் தீவிர தொண்டன், பார்ப்பதற்கு எளிமையா னவர், பழகுவதற்கு இனிமையானவர், பக்குவப்பட்ட பண்பாளர், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.H.வசந்த குமார் அவர்கள் நேற்று (28 August) இயற்கை எய்தியதாக வந்த செய்தி என்னை பெரும் துயரத்தில் ஆழ்தியது.
அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
இவ்வாறு டி. ராஜேந்தர் தெரிவித்திருக் கிறார்.