போபால்
மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் தீபக் சக்சேனா ராஜினாமா செய்துள்ளார்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவரான கமல்நாத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கமல்நாத் போட்டியிடவில்லை.
எனவே அவர் ஆறு மாதங்களுக்குள் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஆக வேண்டும் என்பது விதிமுறை ஆகும். இதை ஒட்டிஅவர் போட்டியிட வசதியாக பலரும் தங்கள் சட்டப்பேரவை தொகுதியை விட்டுத்தர முன் வந்தனர்.
அவ்வாறு முன் வந்தவர்களில் ஒருவரான சிந்த்வாரா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் தீபக் சக்சேனா தனது தொகுதி உறுப்பினர் பதவியை ரஜினாமா செய்துள்ளார். இந்த தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் கமல்நாத் போட்டியிடுவார் என தெரிய வந்துள்ளது.