அஜய்ஞானமுத்து இயக்கத்தில் “விக்ரம் 58” படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது..

இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் தலைப்பு ‘கோப்ரா’ என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஜனவரி மாத இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். இந்தப் படத்தில் நாயகன் கதாபாத்திரத்துக்கும், கோப்ரா பாம்பின் குணாதிசயத்துக்கும் ஒற்றுமை இருக்கும் என்பதால் இந்தத் தலைப்பை வைத்தோம் என படக்குழு தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை வெளியீட்டுக்குத் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முக்கியக் கதாபாத்திரத்தில் மிருணாளினி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.டிக் டாக் செயலி மூலம் பிரபலமான மிருணாளினி தெலுங்கில் ‘ஜிகர்தண்டா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.