ராஞ்சி:

ந்திய கிரிக்கெட் அணியின் வீரரும்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, இன்று தனது சொந்த மாநிலமான ஜார்கண்டில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கினை செலுத்தினார்.

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே, தனது ஜனநாயக உரிமையை தோனி சொந்த மாநிலத்தில் தனது மனைவியுடன் சென்று நிறைவேற்றினார்.

நாடு முழுவதும் இன்று 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜார்கண்டிலும் இன்று 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  ராஞ்சி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்,  சிஎஸ்கே கேப்டன்   ‘தல’ தோனி மனைவியுடன் சென்று வாக்களித்தார்.

நேற்று இரவு நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொண்ட தோனி, தனது வாக்கினை செலுத்தும் வகையில், சிறப்பு விமானம் மூலம் ஜார்கண்ட் சென்றார்.

ராஞ்சியில் உள்ள  ஜேவிஎம் ஷியாமலி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், தனது மனைவி சாக்‌ஷியுடன் சென்று வாக்களித்தார். அப்போது  தோனி தனது மகள் சைவாவை தோளில் தூக்கி வந்தார்.