சென்னை: எம்.எஸ். தோனி மீண்டும் இந்தியாவுக்காக விளையாடுவாரோ இல்லையோ, அவர் சென்னை சூப்பர் கிங்ஸிற்கான ஐபிஎல் 2020 பதிப்பில் விளையாடுவார், மேலும் ஐபிஎல் 2021 க்கு முன்னர் மெகா ஏலத்திற்குச் செல்லும்போது அவர் அணியால் தக்கவைக்கப்படுவார் என்று  ஐபிஎல் ன் உரிமையாளர்களான இந்தியா சிமெண்ட்ஸின் துணைத்தலைவரும் நிர்வாக இயக்குநருமான என். சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் அவர் எப்போது ……..எவ்வளவு காலம் விளையாடுவார் என்று சொல்லிக் கொண்டே  இருக்கிறார்கள்.  அவர் விளையாடுவார்.  நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.  அவர் இந்த ஆண்டு விளையாடுவார்.  அடுத்த ஆண்டு அவர் ஏலத்திற்குச் செல்வார்; அவர் தக்கவைக்கப்படுவார். ஆகையால் யார் மனதிலும் சந்தேகம் இருக்காது, என்று சீனிவாசன் சமீபத்தில் நடந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிகழ்ச்சியில் கூறினார்.

38 வயதான தோனி, ஒரு சுறுசுறுப்பான வீரராகவே இருந்து வருகிறார். ஆனால் 2019 ல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, அவர் நாட்டிற்காக விளையாடவில்லை மேலும் தேர்வு செய்யும் சந்தர்ப்பத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.  இது, விக்கெட்கீப்பர்-பேட்ஸ்மேனின் எதிர்காலம் குறித்த ஒரு நியாயமான யூகத்திற்கு வழி வகுத்தது.

மிக சமீபமாக,  பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இருந்து தோனியின் பெயர் விடுபட்டிருந்தது.  அவர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் தேசிய அணியில் இடம் பெறுவார் என மூத்த அணியின் தலைமைப் பயிற்சியார் ரவி சாஸ்திரி கூறினார்.

“அவர் விளையாட முடிவு செய்தால், அவர் விளையாடுவார் ஏனெனில் அவர் ஐபிஎல் ல் விளையாடுவார். பின்னர், அவர் புத்துணர்ச்சியுடனும், மிகத் தெளிவான யோசனைகளுடனும் தொடங்குவார்“, என்று சாஸ்திரி இந்தியா டுடே வுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

.