மும்பை

லக செல்வந்தர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவன அதிபருமான முகேஷ் அம்பானியின் பேரனுடைய பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வம்சம் வளர்வதைக் காண மிகவும் ஆர்வம் இருக்கும்.  அது குப்பை அள்ளுபவனாலும் சரி, கோடியில் புரள்பவரானாலும் சரி, அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இருக்காது.   இந்த 2020 ஆம் வருடம் பல தம்பதியருக்கு மகப்பேறு கிட்டிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  அதிலும் குறிப்பாகப் பிரபல குடும்பங்களில் மகப்பேறு ஏற்படும் போது அது மேலும் பெரிய செய்தி ஆகிறது.

அவ்வகையில் ரிலையன்ஸ் அதிபரும் உலக செல்வந்தரில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் அவர் மனைவி ஸ்லோகா மேத்தாவுக்கு இந்த மாதம் 10 ஆம் தேதி ஆண்குழந்தை பிறந்தது  இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி மணம் முடித்தனர். அதன்பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் மணவாழ்க்கையின் அடுத்த கட்டமான பெற்றோர் என்னும் நிலையை அடைந்துள்ளனர்.

இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார்கள் எனப் பல ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர்கள் இந்த குழந்தை பிறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.  அதில் குழந்தையின் பெயர் ”பிரித்வி ஆகாஷ் அம்பானி” என அறிவித்துள்ளனர்.   குஜராத்தி முறைப்படி கிருஷ்ணரின் அருளாலும் திருபாய் அம்பானி மற்றும் கோகிலாபென் அம்பானியின் ஆசியுடன் இந்த குழந்தை பிறந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த அறிவிப்பில் முகேஷ் அம்பானி, நிதா அம்பானி, ஸ்லோகாவின் பெற்றோர் இரு வீட்டு உறவினர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.