திருவனந்தபுரம்:
“முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அந்த அணையால் எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அதை நாம் புறம் தள்ள முடியாது” என்று டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த  கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் திரும்பியதும் தலைகீழாக பேசினார்.
download (2)கேரள முதல்வராகப் பதவியேற்றதும் முதல் முறையாக டெல்லி வந்த பினராயி விஜயன், “முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புதான் முக்கியமானது. அதுதான் இந்தப் பிரச்சினை உருவாகவும் காரணம். அதன் அடிப்படையில்தான் இது அணுகப்பட்டது. இதுதொடர்பாக நிபுணர் கமிட்டியும் அமைக்கப்பட்டது. அது அளித்த அறிக்கையில் அணை பாதுகாப்பாக, பலமாக இருப்பதாக கூறியுள்ளது.  அதை நாம் புறக்கணிக்க முடியாது. அதை சந்தேகப்படவும் முடியாது, அவசியமும் இல்லை, தேவையும் இல்லை. அணை பலமாக உள்ளது, அணையின் பலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்”  என்று தெரிவித்தார்.
மேலும், “புதிய அணை கட்ட வேண்டும் என்று கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டதே” என்ற கேள்விக்கு, “அணை பலமாக உள்ளதென்று. நிபுணர் குழு அறிக்கை அளிப்பதற்கு முன்புதான் புதிய அணை தொடர்பான நிலைப்பாட்டை சட்டசபையில் எடுத்தோம். ஆனால் நிபுணர் குழு அறிக்கைக்குப் பின்னர் அந்தத் தீர்மானம் பொருத்தமற்றதாகியுள்ளது. பிரச்சினைகளை உருவாக்குவது மிக மிக எளிது. ஆனால் தீர்வு காண்பதுதான் கடினம். நான் தீர்வுகளை மட்டுமே விரும்புபவன். தமிழ்நாடு நமது அண்டை மாநிலம். தமிழகத்துடன் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.
ஆனால் டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் திரும்பிய பினராயி. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கேரளாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிபுணர் குழு அணை பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ள போதிலும் கூட மக்கள் மனதில் அச்சம் உள்ளது” என்றார்.