மும்பை:

மும்பையை சேர்ந்தவர் அர்ச்சனா கவுதம். 22 வயதாகும் இவர் பிரபல மாடலிங்காகவும், நடிகையாகவும் இருந்து வருகிறார். இவருக்கும் சமூகவலைதளம் மூலம் அனிருத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

 

ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிதருவதாகவும் அதற்கு ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் தருவார்கள் என்று அர்ச்சனாவுக்கு அனிருத் ஆசைகாட்டியுள்ளார்.

இதை நம்பி அனிருத் வரச் சொன்ன இடத்துக்கு அர்ச்சனா சென்றார். அங்கு அனிருத்துடன் 4 பேர் உடனிருந்தனர். அர்ச்சனாவை காரில் ஏற்றிய அனிருத், நாங்கள் சிபிஐ அதிகாரிகள் உன் மேல் விபசார வழக்கு பதிவு செய்ய எங்களால் முடியும் என கூறி மிரட்டினர்.

பின்னர் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறோம் என்று அர்ச்சனாவிடம் அவர்கள் கூறியுள்ளனர். பிறகு அர்ச்சனா தன் அண்ணனிடம் போனில் விஷயத்தை கூறி பணத்துடன் ஏர்போர்ட் அருகில் வருமாறு தெரிவித்தார்.

பின்னர் அர்ச்சனாவை கடத்திய கும்பல் காரை ஏர்போர்ட் அருகில் நிறுத்தினர். அப்போது அர்ச்சனா திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அர்ச்சனாவை மீட்டதோடு கடத்தல் கும்பபை சேர்ந்த ஒரு வாலிபரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அனிருந்து உள்ளிட்டவர்களை தேடி வருகின்றனர்.