மும்பை: மும்பையில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில்  பலியானவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, பல நகரங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
மலாட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஒருவர் பலியானார்.  5 பேர் படுகாயம் அடைந்தனர்.  கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் மீட்பு பணிகள் தொடர்கின்றன.
இந் நிலையில், மும்பை துறைமுக பகுதியில் உள்ள பானுஷாலி என்ற கட்டிடம் நேற்று கனமழையால் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் காயம் அடைந்தனர்.
மீட்பு குழுவினர் 2வது நாளாக மீட்பு பணியை இன்று தொடர்ந்தனர்.  அப்போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியாகி இருந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 9 ஆக  அதிகரித்துள்ளது.