தானே:

போலீசாரை தாக்கியதாக 6 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கமர் அலி ஜாஃப்ரி என்பவர் மீது ஓசிவாரா போலீசில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிவண்டி நகரில் பிரானி படா பகுதியில் கமர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

கமர் பதுங்கி இருந்த அவரைது வீட்டை கண்டுபிடித்த போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது 6 பெண்கள் போலீசாரை சூழந்துகொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் போலீசார் நிலைகுலைந்தனர். போலீசாரின் சீருடைகள் கிழிந்தது. கமரை மீட்க போலீசார் மீது பெண்கள் கற்களை வீசி தாக்கினர். .

போலீசாரை தாக்கிய 6 பெண்கள் மீது சாந்தி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.