சென்னை: டெல்லி அணிக்கெதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மும்பை அணியில், ஜெயந்த் யாதவ் இன்றையப் போட்டியில் புதிதாக இடம்பெற்றுள்ளார். மற்றபடி, அந்த அணியில் பெரிய மாற்றமில்லை. மும்பை அணி, தான் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்து, குறைந்த ரன்களையே எடுத்தது.

ஆனாலும், முதல் போட்டியில், நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டதே தவிர, மற்ற இரண்டு போட்டிகளிலும் குறைந்த ரன்களைக் கொண்டே, திறமையான முறையில் போட்டியை வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கேப்டன் ரோகித்தும், சூர்யகுமாரும் ஆடி வருகின்றனர். மும்பை அணி, 5 ஓவர்களில், 1 விக்கெட் இழந்து 45 ரன்களை எடுத்துள்ளது.