மும்பை:

தாவூத் இப்ராகிம் பெயரில் ரூ.6 கோடி கேட்டு தொழிலதிபரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் அலி சித்திக் (வயது 59). தொழிலதிபர். இவருக்கு வசாய் பகுதியில் 5 ஏக்கரில் நிலம் உள்ளது.

இவரது நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்களை காலி செய்யும்படி கடந்த ஜூனி மாதம் சித்திக் தெரிவித்துள்ளார். நிலத்தை காலி செய்ய தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், தங்களுக்கு ரூ.1 கோடி தரவேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து போலீசில் சித்திக் புகார் அளித்தார். அதனடிப்படையில் அப்துல் ஆக்வான், அனீஸ் சிங், அப்துல் இப்ராகிம், முகமது நகோரி மற்றும் சராபுதீன் ஷேக் உள்ளிட்ட கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.