சென்னை: கொல்கத்தா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்துவரும் மும்பை அணி, ரன்கள் அடிக்க திணறி வருகிறது.

மொத்தம் 14 ஓவர்கள் கடந்த நிலையில், அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ், 36 பந்துகளில் அரைசதம்(56) அடித்து அவுட்டானார். இதில், 2 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகள் அடக்கம்.

கேப்டன் ரோகித் ஷர்மா அரைசதத்தை நெருங்கி வருகிறார். இஷான் கிஷான் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். தற்போது, ரோகித்துடன் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கியுள்ளார். அவர் 15 பந்துகளை சந்தித்து 11 ரன்களை அடித்துள்ளார்.

ஆக, மொத்தத்தில் மும்பை அணி, இந்தப் போட்டியில் ரன்கள் அடிக்க திணறி வருகிறது என்பதே உண்மை.