சென்னை: டெல்லிக்கு எதிரான லீக் போட்டியல், மும்பை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

அந்த அணியின் கேப்டன் ரோகித், 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்ய குமார், 15 பந்துகளில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டாக டி காக், 4 பந்துகளுக்கு 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

ஆனால், 2 முக்கிய பேட்ஸ்மென்கள் ஆட்டமிழந்த பிறகு, மும்பை அணிக்கு சிக்கல் ஆரம்பமானது. ஆல்ரவுண்டர் ஹர்திக், டக்அவுட் ஆனார். கருணால் பாண்டியா 1 ரன்னுக்கு காலியானார். தற்போது இஷான் கிஷானும், பொல்லார்டும் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 11 ஓவர்கள் கடந்த நிலையில், மும்பை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து, 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.