கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைக் கருத்தில்கொண்டு பலரும் தங்களால் இயன்ற அளவு நிதியுதவி அளித்து வருகிறார்கள். பி.எம். கேர்ஸ் நிதி, முதல்வர் நிவாரண நிதி எனத் தொடங்கி பல்வேறு நடிகர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி மும்பையில் தனக்குச் சொந்தமான 8 ஹோட்டல்களை கொரோனா பணியாளர்கள் தங்கிக் கொள்வதற்காக வழங்கியுள்ளார்.

ரோஹித் ஷெட்டியின் இந்தச் செயலுக்கு மும்பை காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது.

‘மும்பையில் தனக்குச் சொந்தமான 8 ஹோட்டல்களை நமது கொரோனா போராளிகள் ரோஹித் ஷெட்டி வழங்கியுள்ளார். இந்த அன்பான உதவிக்கும் மும்பையைப் பாதுகாப்பதில் எங்களுக்கு உதவுவதற்கு அவருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்”.என பதிவிட்டுள்ளார் .