சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு சஞ்சய் லீலா பன்சாலிக்கு விசாரணைக்கு சம்மன் அனுப்ப உள்ளது மும்பை போலீஸ் .அப்படி அனுப்பினால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு தொடர்பாக பன்சாலி விசாரணைக்கு அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும் .
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக விசாரிப்பதற்காக பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் யஷ்ராஜ் பிலிம்ஸ் நடிக இயக்குனர் ஷானு சர்மா ஆகியோருக்கு மும்பை காவல்துறை சம்மன் அனுப்ப உள்ளதாக உயர் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு தொடர்பாக பன்சாலி விசாரணைக்கு அழைக்கப்படுவது இதுவே முதல் முறை ஆனால் சர்மா ஏற்கனவே முன்பு விசாரிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணையில் நேரடி தொடர்பு இல்லாத நடிகர் கங்கனா ரனாவத் மற்றும் இயக்குனர் சேகர் கபூர் ஆகியோர் தங்கள் அறிக்கைகளை காவல்துறையில் பதிவு செய்ய அழைக்கப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .