மும்பை: மும்பையில் கேஇஎம் மருத்துவமனை கோவிஷீல்ட் தடுப்பூசியின் சோதனைகளைத் தொடங்கி உள்ளது.

மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் மெமோரியல் மருத்துவமனை கோவிட் -19க்கான ஆக்ஸ்போர்டு கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2ம் மற்றும் 3ம் சோதனைகளைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரேல் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு தடுப்பூசி பரிசோதனைகளை நடத்துவதற்கு மகாராஷ்டிரா நெறிமுறைக் குழுவின் ஒப்புதல் கிடைத்தது.

கே.இ.எம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஹேமந்த் தேஷ்முக் கூறுகையில், மருத்துவமனை தன்னார்வலர்களை சோதனைகளுக்கு பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. 100 தன்னார்வலர்கள் மீது மருத்துவ சோதனைகளை நடத்தவுள்ளது என்றார்.

பிரஹன் மும்பை மாநகராட்சி நடத்தும் பி ஒய் எல் நாயர் மருத்துவமனை, தடுப்பூசி பரிசோதனைகளை நடத்துவதற்கான ஒப்புதலையும் பெற்றுள்ளது. கே.இ.எம் மற்றும் நாயர் மருத்துவமனைகள் இரண்டுமே 200 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மீது சோதனைகளை மேற்கொள்ளும்.