சென்னை:

ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டதாக சென்னை போலீசார் உறுதிப்படுத்தினர்.

சென்னையில் நடந்த நகை கொள்ளை சம்பவ குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அங்கு மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.

அவரை கொள்ளையர்கள் சுட்டதாக முன்பு கூறப்பட்டது. பின்னர் ராஜஸ்தான் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெரியபாண்டியனுடன் வந்த கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் சுட்டதில் தான் அவர் இறந்ததாக தெரிவித்தனர்.

தொடர் விசாரணையில் முனிசேகர் தான் தவறுதலாக சுட்டது உறுதியானது. முனி சேகர் தவறுதலாக சுட்டதை சென்னை போலீசார் உறுதிப்படுத்தினர். முனி சேகர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணைக்கு பிறகு முடிவு எடுக்கபடும் என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.